Translate

சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 58

 சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 58

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. 

இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும்.

ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர்  பெற்றது

இனிதுண்பா னென்பான் உயிர்கொல்லா துண்பான்

முனிதக்கா னென்பான் முகன்ஒழிந்து வாழ்வான்

தனிய னெனப்படுவான் செய்தநன் றில்லான்

இனிய னெனப்படுவான் யார்யார்க்கே யானும்

முனியா ஒழுக்கத் தவன். . . . .[058]

ஓருயிரையும் கொல்லாமல் காய்கறி உணவுகளை உண்பவன் இனிதாக உண்பவனாவான்; முகமலர்ச்சியற்றவன் பிறரால் வெறுக்கப்படுபவன் ஆவான்; பிறர்க்கு உதவி செய்யாதவன் துணையில்லாதவன் ஆவான். எவராலும் வெறுக்கத்தகாத இயல்பை உடையவன் இனியவன் ஆவான்

One who eats only vegetable foods without killing any living being is the one who eats sweetly; one without a cheerful face is the one who will be hated by others; one who does not help others is the one without support. One who possesses a nature that cannot be hated by anyone is the pleasant one.


Post a Comment

Previous Post Next Post