Translate

சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 69

 சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 69

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. 

இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும்.

ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர்  பெற்றது

பதிநன்று பல்லார் உறையின் ஒருவன்

மதிநன்று மாசறக் கற்பின் - நுதிமருப்பின்

ஏற்றான்வீ றெய்தும் இனநிரை தான்கொடுக்குஞ்

சோற்றான்வீ றெய்தும் குடி. . . . .[069]

பலரும் நிறைந்து ஒன்றுபட்டு வாழ்வாரானால் ஊர் நன்றாகும். ஐயந்திரிபறக் கற்பவனால் அவன் அறிவு நன்றாகும். ஆனிரைகள் (பசுக்கள்) கூர்மையான கொம்புகளையுடைய ஏறுகள் உடனிருத்தலால் சிறப்படையும். ஏழைகளுக்கு உணவளிப்பதால் ஒருவனது குடி மேலோங்கும்.

If many people live together in unity, the town will be good. Through faultless learning, one's knowledge will become good. Herds of cattle (cows) will flourish by having sharp-horned bulls among them. By feeding the poor, one's lineage will prosper.


Post a Comment

Previous Post Next Post