Translate

சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 56

 சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 56

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. 

இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும்.

ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர்  பெற்றது

மாண்டவர் மாண்ட வினைபெறுப வேண்டாதார்

வேண்டா வினையும் பெறுபவே - யாண்டும்

பிறப்பார் பிறப்பார் அறனின் புறுவர்

துறப்பார் துறக்கத் தவர். . . . .[056]

அறிவாற் சிறந்தவர்கள் மாட்சிமைப்பட்ட செயல்களையே செய்வர். அறிவிற்குறைந்தவர்கள் தீவினையே செய்வர். உயர்ந்த குடியில் பிறந்தோர் இருமையிலும் (இம்மை, மறுமை) அறத்தையே விரும்பிச் செய்வர். பற்றற்றத் துறவிகள் வீட்டின்பத்தையே (சொர்க்கம்) விரும்புவர்.

Those who are excellent in wisdom will perform glorious deeds. Those with deficient intellect will commit evil. Those born in noble families will desire and perform righteousness in both worlds (this life and the next). Detached ascetics will desire only the bliss of liberation (heaven/moksha).


Post a Comment

Previous Post Next Post