Translate

சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 47

 சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 47

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. 

இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும்.

ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர்  பெற்றது

போதினான் நந்தும் புனைதண்தார் மற்றதன்

தாதினான் நந்துஞ் கரும்பெல்லாந் - தீதில்

வினையினான் நந்துவர் மக்களுந் தத்தம்

நனையினான் நந்தும் நறா. . . . .[047]

மாலை பூவினால் விளங்கும். வண்டுகள் அப்பூவில் உள்ள தேனாற் பொலியும். நற்செயல்களால் மக்கள் பொலிவர். தேன் தாமிருக்கும் மலர் வகைக்கு ஏற்பப் பெருகி இனிக்கச் செய்யும்.

Garlands are made beautiful by the flowers they contain, just as bees are nourished by the honey they gather. Similarly, people are glorified by their good deeds, and honey's sweetness and abundance are determined by the flowers from which it is collected.


Post a Comment

Previous Post Next Post