Translate

79 நெஞ்சுக்கு ஒரு நோய்

 சங்கத்தமிழ் 2. – திரிகடுகம் 79 நெஞ்சுக்கு ஒரு நோய்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். 

இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். 

திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். 

சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது

பழி அஞ்சான் வாழும் பவுசும், அழிவினால்

கொண்ட அருந் தவம் விட்டானும், கொண்டிருந்து

இல் அஞ்சி வாழும் எருதும், - இவர் மூவர்

நெல் உண்டல் நெஞ்சிற்கு ஓர் நோய். . . . .[79]

பழிக்கு அஞ்சாமல் பசு போல் உயிர் வாழ்கின்றவனும், கேடு வந்த போது அரிய தவத்தினை விட்டவனும், தனக்கு உட்பட்டவளாக இருந்தாலும் மனைவிக்கு அஞ்சி எருது போல் வாழ்பவனும், எப்பொழுதும் துன்பப்படுவர்.

"One who lives like a cow without fearing blame, one who abandons the difficult penance when adversity strikes, and one who lives like an ox, fearing his wife even though she is under his control, will always suffer."



1 Comments

Post a Comment

Previous Post Next Post