சங்கத்தமிழ் 2. – திரிகடுகம் 77. குடிப்பிறப்பில் குற்றம் அற்றவர் செயல்
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
• இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.
• திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும்.
• சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது
கயவரைக் கையிகந்து வாழ்தல், நயவரை
நள் இருளும் கைவிடா நட்டு ஒழுகல், தெள்ளி
வடுவான வாராமல் காத்தல், - இம் மூன்றும்
குடி மாசு இலார்க்கே உள. . . . .[77]
கயவரை (தீயவரை) தூரமாக விட்டு வாழ்வது, நயவரை (நல்லவர்களை) இருளில் கூட கைவிடாமல் நெருக்கமாகப் பழகி நட்பு பாராட்டுவது, தெளிவாக அடையாளம் காட்டும் பகைவர்களிடம் பிழை இல்லாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இம் மூன்று செயல்களும் நல்ல குடிப்பிறப்பினர் (நல்ல குணம் கொண்டவர்கள்) இன்றி, பிறர்க்கு இல்லை. அவர்கள் மட்டுமே இம்மூன்று சாத்தியங்களை மேற்கொள்ளத் தகுதியுடையவர்கள்.
Avoiding wicked people, maintaining close relationships with good people even in times of darkness, and carefully guarding against clear enemies without making mistakes—these three qualities belong only to those of noble character. Only those of virtuous nature can properly carry out these actions.
கீழ்மக்களைச் சேராமல் வாழ்தலும், நீதியுடையவரை நட்பு செய்து கொள்ளுதலும், தனக்குப் பழி வரும் செயல்களைச் செய்யாதிருத்தலும், நல்லவர் செய்கைகள் ஆகும்.
Post a Comment