Translate

சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 67

 சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 67

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. 

இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும்.

ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர்  பெற்றது

கைத்தில்லார் நல்லவர் கைத்துண்டாய்க் காப்பாரின்

வைத்தாரின் நல்லர் வறியவர் - பைத்தெழுந்து

வைதாரின் நல்லர் பொறுப்பவர் செய்தாரின்

நல்லர் சிதையா தவர். . . . .[067]

செல்வமிருந்தும் அச் செல்வத்தால் பயனடையாதவர்களை விட செல்வமில்லாதவர்கள் நல்லவர்கள். செல்வத்தைச் சேர்த்துவைத்து இழப்பவரை விட வறியவர் மிக நல்லவர். சினந்து வைபவர்களை விட அதனைப் பொறுப்பவர் மிகவும் நல்லவர். பிறருக்கு உதவியவரை விட செய்ந்நன்றியை மறவாதவர் மிக நல்லவர்.

Those without wealth are better than those who have wealth but do not benefit from it. The very poor are much better than those who accumulate wealth only to lose it. Those who endure anger are much better than those who harbor it. Those who remember a good deed done to them are much better than those who merely helped others.


Post a Comment

Previous Post Next Post