Translate

சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 52

 சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 52

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. 

இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும்.

ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர்  பெற்றது

எருதுடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான்;

ஒருதொடையான் வெல்வது கோழி - உருபோடு

அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்ணென்ப சேனைச்

செறிவுடையான் சேனா பதி. . . . .[052]

உழவு மாடுடையவன் வேளாளன். ஒரு காலால் பெடையை வயப்படுத்துவதான கோழியைப் போல எவரோடும் மாறுபடாது ஒற்றுமையுடன் வாழ்பவன் பார்ப்பனன். அழகும் அறிவும் உடையவள் வாழ்க்கைத் துணை. சேனையோடு ஒன்றுபட்டு உடனுறைபவன் சேனாபதி.

The one possessing ploughing oxen is a farmer (Vellalan). Like a rooster that subdues the hen with one leg, the Brahmin is one who lives in unity with everyone, without differing from them. The life partner is one who possesses beauty and knowledge. The one who unites with the army and lives together with them is a commander (Senapati).


Post a Comment

Previous Post Next Post