திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
• இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.
• திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும்.
• சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது
• இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.
• திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும்.
• சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது
பல்லவையுள் நல்லவை கற்றலும், பாத்து உண்டு ஆங்
இல்லறம் முட்டாது இயற்றலும், வல்லிதின்
தாளின் ஒரு பொருள் ஆக்கலும், - இம் மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை. . . . .[31]
"பல்லவையுள் நல்லவை கற்றலும்" - பல விஷயங்களில் இருந்து நல்லவற்றைக் கற்றுக்கொள்வது
"பாத்து உண்டு ஆங்கு இல்லறம் முட்டாது இயற்றலும்" - பகிர்ந்து உண்டு, இல்லற வாழ்க்கையை சிறப்பாக நடத்துவது
"வல்லிதின் தாளின் ஒரு பொருள் ஆக்கலும்" - திறமையாக உழைத்து பொருள் ஈட்டுவது
"இம் மூன்றும் கேள்வியுள் எல்லாம் தலை" - இந்த மூன்று செயல்களும் கல்வியின் உயர்ந்த நோக்கங்களாகும்.
கல்வியின் முழுமையான நோக்கத்தை விளக்குகிறது - வெறும் புத்தக அறிவு மட்டுமல்ல, அதை வாழ்க்கையில் பயன்படுத்தி, பிறருக்கு உதவி, பொருளாதார வளர்ச்சியையும் அடைய வேண்டும் என்பதே இதன் சாரம்..
நல்லவற்றைக் கற்றலும், இல்லாளோடு குறைவின்றி அறம் செய்வதும், முயற்சியால் செயற்கரிய செய்கையை முடித்தலும் சிறந்த கல்வியாகும்.
Ok
ReplyDeletePost a Comment