Translate

சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 78

 சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 78

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. 

இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும்.

ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர்  பெற்றது

நாவன்றோ நட்பறுக்கும் தேற்றமில் பேதை

விடுமன்றோ வீங்கிப் பிணிப்பின் அவாஅப்

படுமன்றோ பன்னூல் வலையிற் கெடுமன்றோ

மாறுள் நிறுக்கும் துணிபு. . . . .[078]

பதறிய நாக்கினால் நட்புக் கெடும். கட்டாயப்படுத்தினால் தெளிவில்லாத பேதை மக்களின் நற்செயல்கள் கெடும். நூல்களைப் பயில்வதால் மாணாக்கருக்கு அவாக்கெடும். பகைமைக் கண் ஒருவன் வைக்கும் தீராத பகைமையால் அவனே கெடுவான்.

Friendship is ruined by a hasty tongue. The good deeds of unclear-minded, ignorant people are ruined by compulsion. By studying books, a student's desires (for worldly things) will diminish. By the relentless enmity that a hostile eye holds, that person themselves will be ruined.


Post a Comment

Previous Post Next Post