Translate

சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 6

 சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 6

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. 

இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும்.

ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது.

திருவொக்கும் தீதில் ஒழுக்கம் பெரிய

அறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறானக்

கொலையொக்கும் கொண்டுகண் மாறல் புலையொக்கும்

போற்றாதார் மன்னர்ச் செலவு. . . . .[006]

நல்லொழுக்கம் செல்வம் போன்றது. முறையான இல்லற ஒழுக்கம் துறவறத்தைப் போன்று தூய்மையானது. பிறரைப் பழித்துப் புறங்கூறுதல் கொலை செய்தல் போன்றது. தம்மை மதியாதவரை மதித்தல் என்பது இழிதகைமையானது ஆகும்.

Four moral comparisons:  Good conduct is like wealth (as valuable as material prosperity) Proper conduct in family life is as pure as the life of renunciation. Gossiping about others is comparable to murder. Respecting those who disrespect you is considered degrading


Post a Comment

Previous Post Next Post