சங்கத்தமிழ் 2. – திரிகடுகம் 89. பிறந்தும் பிறவாதவர்
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
• இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.
• திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும்.
• சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது
அருளினை நெஞ்சத்து அடைகொடாதானும்,
பொருளினைத் துவ்வான் புதைத்து வைப்பானும்,
இறந்து இன்னா சொல்லகிற்பானும், - இம் மூவர்
பிறந்தும் பிறந்திலாதார். . . . .[89]
• அருளினை நெஞ்சத்து அடைகொடாதானும்: கருணையை மனதில் கொள்ளாதவன்.
• பொருளினைத் துவ்வான் புதைத்து வைப்பானும்: பொருளை அனுபவிக்காமல் மறைத்து வைப்பவன்.
• இறந்து இன்னா சொல்லகிற்பானும்: பிறர்க்கு துன்பம் தரும் சொற்களைச் சொல்பவனும் கெட்ட சொற்களை பேசுபவனும்.
• இம் மூவர் பிறந்தும் பிறந்திலாதார்: இந்த மூவரும் பிறந்திருந்தும் பிறக்காதவர்களே ஆவர்.
• One who does not harbor compassion in their heart: A person who lacks kindness and empathy.
• One who hoards wealth without enjoying it: A person who accumulates riches without experiencing their benefits.
• One who speaks ill even after death: A person who utters harmful words even after passing away.
• These three, though born, are as if unborn: These three types of individuals, despite being born, are considered as if they never lived.
அருளினை நிறைத்து வைத்துக் கொள்ளாதவனும், செல்வத்தை மறைத்து வைத்துக் கொள்கின்றவனும், பிறர்க்கு துன்பம் தரும் சொற்களைச் சொல்பவனும், மக்கட் பிறப்பாக கருதப்பட மாட்டார்.
Post a Comment