இன்றைய உலகில் இணையம் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்கவே முடியாது. அது நம்மைச் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் ஊடுருவி, நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் மெருகேற்றி வருகிறது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்புகள், ஆராய்ச்சி, தகவல் தேடல் என இணையம் கல்வியை புதிய உயரங்களுக்குக் கொண்டு சென்றுள்ளது. வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் வாய்ப்பு, ஆன்லைன் கூட்டங்கள், தகவல் பரிமாற்றம் என இணையம் வேலை செய்யும் விதத்தையே மாற்றியுள்ளது. ஏன் இப்பொழுது இதைப் படிக்கிறீர்களே எல்லாமே அதன் மூலம்தான்.
தொழில் புரட்சி ஏற்பட்டப் பிறகு வளர்ச்சி என்பது பெரிய அளவில் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு மாறிவிட்டது. Smart City, Smart industry போன்று தற்போது Smart home என்ற ஒன்று பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. நம் மொபைல்களிலும் Home என்று தனியாக ஒரு அப்ளிகேஷன் இருக்கும்.
Smart Home என்பது நம் வீட்டு உபயோகப் பொருட்களை நம் கையில் உள்ள குட்டிசாத்தான், நான் செல்லமாக ‘மைடியர் பூதம்’ என்று தான் அழைப்பேன், Smart phone உள்ளதே அதன் மூலம் அனைத்து பொருட்களையும் Control செய்வது தான் Smart home இதை சாத்தியப்படுத்தியது தான் IOT என்று அழைக்கப்படும் internet of things.
நாம் கையில் கட்டும் Smart வாட்சிலிருந்து Smart மோதிரம், Google கண்ணாடி என்று ஏதாவது ஒரு வடிவத்தில் நம்முடன் இணைந்துள்ளது. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் anything with internet is IOT.
நாம் காலையில் அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பி விட்டோம், வீட்டில் உள்ள நீர் இறைக்கும் மோட்டார், கேஸ் ஸ்டவ், Fan & Light இவையெல்லாம் அணைக்காமல் சென்று விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், ஆபிஸ் போனதும் ஞாபகம் வருகிறது உடனே என்ன செய்வோம், லீவு போட்டு வந்து அனைத்தையும் சரி செய்வோம் அல்லது அப்படியே விட்டுவிட்டு சாயங்காலம் வந்து பார்த்துக் கொள்வோம். இதனால் நமக்கு நிறைய பொருள் இழப்பு ஏற்படும். இதனையே நம் கையில் உள்ள பூதத்தை அதாவது Smart Phoneஐ எடுத்து எல்லாவற்றையும் Switch off செய்து விடலாம். அல்லது ஆன் செய்யலாம்.
சாயங்காலம் வீட்டுக்கு வருவதற்கு முன் வீட்டில் உள்ள ACஐ ஆன் செய்யலாம் மேலும் பாடல்கள் போடலாம். இன்னும் நிறைய இருக்கிறது. இதனை சாத்தியப்படுத்தியது தான் IOT devices. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக வந்துக் கொண்டேதானிருக்கின்றன.
முதலில், இது பணக்காரர்கள் மட்டும் உபயோகிக்க கூடிய விலையில் இருந்தது. இப்போது நம்மைப் போன்ற நடுத்தர மக்களும் வாங்கக்கூடிய விலையில் சுலபமாக கிடைக்கின்றது. அதுவும் ஏகப்பட்ட Competitionகள் வேறு.
சரி இப்பொழுதுதான் மெயின் பிக்சருக்கு வர்றோம், இந்த IOT devicesஐ ஏன் தற்போதுள்ள AI கூட இணைக்கக்கூடாது. இரண்டையும் இணைத்து என்னென்ன விஷயங்கள் செய்யலாம் என்கின்ற ஆராய்ச்சியில் இறங்கி விட்டார்கள் பிரபல நிறுவனங்கள். மொத்தத்தில் நம்மை முழு நேர சோம்பேறியாக்கி அவர்களின் பொருட்களுக்கு அடிமையாக வைக்கவே திட்டம் இடுகிறார்கள்.
எப்படியும் நம் நாட்டில் வருவதற்கு ஒரு இருபது வருடமாவது ஆகும் ஏனென்றால் இந்த IOT முதலில் ஆரம்பிக்கப்பட்டதே 1999ல் இப்பொழுதுதான் இங்கு சாத்தியமாகிறது. இனி வருங்காலத்தில் என்னவெல்லாம் நடக்குமோ....
-S.B.
நன்று
ReplyDeletePost a Comment