Translate

சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 97

 சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 97

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. 

இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும்.

ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர்  பெற்றது

மாசுபடினும் மணிதன்சீர் குன்றாதாம்

பூசிக் கொளினும் இரும்பின்கண் மாசொட்டும்

பாசத்துள் இட்டு விளக்கினும் கீழ்தன்னை

மாசுடைமை காட்டி விடும். . . . .[097]

அழுக்கு சேர்ந்தாலும் நன்மணியின் பெருமை குறையாது. கழுவி எடுத்தாலும் இரும்பில் மாசு உண்டாகும். கீழ் மக்களிடத்து பாசத்தைக் காட்டினாலும் அவர்கள் தங்கள் கீழ்மைத் தன்மையைக் காட்டிவிடுவர்.

Even if dirt accumulates, the worth of a good jewel will not diminish. Even if washed, rust will appear on iron. Even if affection is shown to base people, they will reveal their base nature.


Post a Comment

Previous Post Next Post