Translate

சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 91

 சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 91

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. 

இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும்.

ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர்  பெற்றது

இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்

வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்

கிளைஞரில் போழ்திற் சினம்குற்றம் குற்றம்

தமரல்லார் கையகத் தூண். . . . .[091]

இளமைப் பருவத்தில் கல்லாமை குற்றம். செல்வ வளம் இல்லாதபோழ்து வள்ளல் தன்மையுடன் நடத்தல் குற்றம். உறவினர் துணையில்லாத போழ்து பிறரைச் சினத்தல் குற்றம். உள்ளன்பு இல்லாதவர்களிடம் உணவு பெற்று உண்பது குற்றம்.

Not learning in youth is a fault. Acting generously when one lacks wealth is a fault. Getting angry at others when one has no relatives for support is a fault. Receiving and eating food from those who have no genuine affection is a fault.


Post a Comment

Previous Post Next Post