Translate

சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 90

 சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 90

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. 

இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும்.

ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர்  பெற்றது

வன்கண் பெருகின் வலிபெருகும் பான்மொழியார்

இன்கண் பெருகின் இனம்பெருகும் சீர்சான்ற

மென்கண் பெருகின் அறம்பெருகும் வன்கண்

கயம்பெருகின் பாவம் பெரிது. . . . .[090]

அஞ்சாமை மிகுந்தால் வலிமை மிகும். மனையாள் மாட்டுக் கருணை மிகுந்தால் இனம் பெருகும். அருள் மிகுந்தால் அறம் மிகும். கீழ்மைக் குணம் மிகுந்தால் தீவினை மிகும்.

If fearlessness increases, strength will increase. If kindness towards one's wife increases, the lineage will multiply. If grace increases, righteousness will increase. If base qualities increase, evil deeds will increase.


Post a Comment

Previous Post Next Post