Translate

சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 5

சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 5

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. 

இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும்.

ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது.

கல்லிற் பிறக்குங் கதிர்மணி காதலி

சொல்லிற் பிறக்கும் உயர்மதம் - மெல்லென்று

அருளிற் பிறக்கும் அறநெறி எல்லாம்

பொருளிற் பிறந்து விடும். . . . .[005]

ஒளியுள்ள உயர்ந்த மணிகள் எல்லாம் மலையில் உண்டாகும். காதலியின் இனிய மொழிகள் மிகுந்த களிப்பை ஏற்படுத்தும், மென்மையான அருளுள்ளம் கொண்டவர்களிடத்து அறநெறி தோன்றும். இவை எல்லா இன்பமும் செல்வத்தினால் உண்டாகிவிடும்


All bright, precious gems are formed in mountains. A lover's sweet words bring great joy. Righteous conduct emerges from those with gentle, compassionate hearts. The passage concludes by suggesting that all these pleasures and positive attributes ultimately come from wealth or prosperity.


Post a Comment

Previous Post Next Post