Translate

சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 100

 சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 100

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. 

இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும்.

ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர்  பெற்றது

அலைப்பான் பிறவுயிரை யாக்கலும் குற்றம்

விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலும் குற்றம்

சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்

கொலைப்பாலுங் குற்றமே யாம். . . . .[100]

பிற உயிரை அழிப்பதற்காக வளர்த்தலும் குற்றம். விலை கொடுத்து பிற உயிரை வாங்கி அதன் ஊனை உண்ணுதல் குற்றம். சொல்லத் தகாத சொற்களைப் பேசுவதும் குற்றம். கொலை புரிதலும் குற்றமேயாகும்.

Raising a living being for the purpose of destroying it is a sin. Buying a living being for a price and eating its flesh is a sin. Speaking unspeakable words is also a sin. And committing murder is indeed a sin.


Post a Comment

Previous Post Next Post