Translate

சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 84

 சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 84

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. 

இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும்.

ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர்  பெற்றது

ஒன்றூக்கல் பெண்டிர் தொழில்நலம் என்றும்

நன்றூக்கல் அந்தணர் உள்ளம் பிறனாளும்

நாடூக்கல் மன்னர் தொழில்நலம் கேடூக்கல்

கேளிர் ஒரீஇ விடல். . . . .[084]

கணவரோடு ஒருமைப்பட்டு நிற்க முயலுதலே பெண்டிர்க்கு நல்ல செயல் ஆகும். அற நினைவுகளை எழுப்பிக் கொண்டிருத்தலே அந்தணருள்ளத்திற்குச் சிறப்பு செயல் ஆகும். பிறர் ஆளும் நாட்டைப் பெற முயலுதலே மன்னருக்கு உரிய செயலாகும். சுற்றத்தாரை நீக்கி வாழ்தல் கேட்டிற்கு முயலுதலாகும்.

Striving to be united with one's husband is the good deed for women. Constantly holding onto thoughts of righteousness is the special deed for the hearts of Brahmins. Striving to acquire another's kingdom is the proper deed for kings. Living by excluding relatives is striving for ruin.


Post a Comment

Previous Post Next Post