Translate

சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 27.

 சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 27.

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. 

இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும்.

ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர்  பெற்றது

கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்

புற்கந்தீர்ந்து இவ்வுலகின் கோளுணரும் கோளுணர்ந்தால்

தத்துவ மான நெறிபடரும் அந்நெறி

இப்பால் உலகின் இசைநிறீஇ - உப்பால்

உயர்ந்த உலகம் புகும். . . . .[027]

ஒருவன் அறிவு சார்ந்த நூல்களைக் கற்பதனால் அறியாமை குறையப் பெறுவான். அறியாமை குறைவதால் புல்லறிவு நீங்கி உலக இயற்கையை அறிவான். உலக இயற்கையை உணர மெய்நெறியாகிய வீட்டு நெறி செல்வான். வீட்டு நெறி செல்ல இவ்வுலகில் புகழை நிலை நிறுத்தி மறுமையில் பேரின்பம் அடைவான்.

By acquiring knowledge from learned texts, one can diminish ignorance. This reduction in ignorance leads to the dispelling of foolishness and the understanding of the natural world. Comprehending the world leads to the pursuit of true righteousness and liberation. Ultimately, by following this path, one can establish a lasting legacy of fame in this world and attain eternal bliss in the afterlife.


Post a Comment

Previous Post Next Post