Translate

சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 18

 சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 18

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. 

இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும்.

ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது

மனைக்காக்கம் மாண்ட மகளிர் ஒருவன்

வினைக்காக்கம் செவ்விய னாதல் - சினச்செவ்வேல்

நாட்டாக்கம் நல்லனிவ் வேந்தென்றல் கேட்டாக்கம்

கேளிர் ஒரீஇ விடல். . . . .[018]

நல்லியல்பு கொண்ட பெண்களால் குடும்பம் சிறப்படையும். படைப்பயிற்சி சிறப்பாகக் கொண்டவன் போரில் வெற்றியைப் பெறுவான் செங்கோல் அரசன் நாட்டை உயர்த்துவான். உறவினரை ஒதுக்கியவன் கேட்டினை அடைவான்.

A family thrives under the guidance of virtuous women, just as a well-trained warrior achieves victory in battle. A righteous king elevates the prosperity of his nation, while one who isolates themselves from their relatives inevitably faces ruin.


Post a Comment

Previous Post Next Post