சங்கத்தமிழ் 2. – திரிகடுகம் 60 துன்பப் பிறப்புகள்
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
• இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.
• திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும்.
• சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது
பேஎய்ப் பிறப்பிற் பெரும் பசியும், பாஅய்
விலங்கின் பிறப்பின் வெரூ உம், புலம் தெரியா
மக்கட் பிறப்பின் நிரப்பி இடும்பை, - இம் மூன்றும்
துக்கப் பிறப்பாய்விடும். . . . .[60]'
1. பேய்களாகப் பிறந்தால் அவற்றிற்கு ஏற்படும் பெரும் பசியும்
2. விலங்குகளாகப் பிறந்தால் அவற்றிற்கு ஏற்படும் அச்சமும்
3. அறிவில்லாத மனிதர்களாகப் பிறந்தால் அவர்களுக்கு ஏற்படும்
அறிவாகிய பொருளை உணராத துன்பமும் இந்த மூன்று பிறவிகளும் துன்பம் நிறைந்த பிறவிகளாக அமையும்.
The great hunger in the birth as a ghost, The fear in the birth as an animal, The suffering of poverty in birth as an ignorant human, These three births result in suffering.
பேயினது பிறப்புடையவர்களின் பெரும் பசியும், பாயும் விலங்கினது அச்சமும், அறிவாகிய பொருளை உணராத மக்களின் வறுமையும் மிக்க துன்பத்தை தரக்கூடியதாகும்.
Post a Comment