Translate

சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 57

 சங்கத்தமிழ் 3- நான்மணிக்கடிகை 57

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. 

இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 

நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும்.

ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர்  பெற்றது

என்றும் உளவாகும் நாளும் இருசுடரும்

என்றும் பிணியும் தொழிலொக்கும் - என்றும்

கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர் பிறப்பாரும்

சாவாரும் என்றும் உளர். . . . .[057]

விண்மீன்களும், சந்திரனும், சூரியனும் என்றும் உள்ளன. நோயும் முயற்சியும் என்றும் உள்ளன. ஈவாரும், ஏற்பாரும் என்றும் உள்ளனர். பிறப்பாரும் இறப்பாரும் என்றும் உள்ளனர்.

Stars, the moon, and the sun have always existed. Disease and effort have always existed. Givers and receivers have always existed. Those who are born and those who die have always existed.


Post a Comment

Previous Post Next Post