Translate

83 நல்வழியைக் கெடுக்காதவை

 சங்கத்தமிழ் 2. – திரிகடுகம் 83 நல்வழியைக் கெடுக்காதவை

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். 

இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். 

திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். 

சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது

உப்பின் பெருங் குப்பை, நீர் படின், இல்லாகும்;

நட்பின் கொழு முளை, பொய் வழங்கின், இல்லாகும்;

செப்பம் உடையார் மழை அனையர்; - இம் மூன்றும்

செப்ப நெறி தூராவாறு. . . . .[83]

உப்பின் பெருங்குப்பை நீர்படின் இல்லாகும்: உப்பின் பெரிய குவியல் மீது நீர் பட்டால் அது கரைந்து இல்லாமற் போகும்.

நட்பின் கொழுமுளை பொய் வழங்கின் இல்லாகும்: நட்பின் பசுமையான உறவு பொய் சொன்னால் இல்லாமற் போகும்.

செப்பம் உடையார் மழை அனையர்: நடுநிலைமை உடையவர்கள் மழை போன்றவர்கள்.

இம் மூன்றும் செப்ப நெறி தூராவாறு: இந்த மூன்று விஷயங்களும் நல்ல வழியை கெடுக்காதவை.


A large heap of salt disappears when water falls on it: A large pile of salt dissolves and disappears when exposed to water.

A thriving friendship disappears when lies are told: A flourishing friendship withers away when lies are told.

Those who are righteous are like rain: Those who are just and fair are like rain, benefiting everyone.

These three things do not deviate from the righteous path: These three principles ensure that one stays on the path of righteousness.

உப்பின் குவியல் மீது நீர் படிந்தால் உப்பு கரைந்து போகும். நட்பில் பொய் வந்தால் கெட்டுப் போகும். நடுநிலைமையுடையர் மழை போல் எல்லோருக்கும் உதவி செய்வர். இம்மூன்றும் நல்ல நெறிகளைக் கெடுக்கா முறைகள் ஆகும்.



Post a Comment

Previous Post Next Post